Monday, October 31, 2011

10-30-2011 நிகழ்ச்சி - பல்வேறு படிப்புகள்

இந்த blogspot உங்களின் நீயா நானா எண்ணத்தை வெளிபடுத்த ஏற்படுத்தப்பட்ட ஒரு தளம். ஒரு நல்ல நிகழ்ச்சி, அதை பார்க்கும் அனைவருக்கும், தங்களின் எண்ணத்தை வெளிபடுத்த மனம் துடிக்கும், அப்படிப்பட்ட எண்ணங்களுக்கு ஒரு வடிகால் தான் இந்த முயற்சி.

முதலில் 10-30-2011 அன்று வெளியான, பல்வேறு பட்டங்களை பற்றிய ஒரு விவாதம்.
இன்றைய கால கட்டத்தில், இருக்கும் வாய்ப்புகளை பயன் படுத்தி கொள்ள எப்படி மாணவ சமுதாயம் முயற்சிக்கிறது என்பது ஒரு பக்கமும், கலை/அறிவியல் படிக்காததால் அவர்கள், ஏதோ மனிதத்தையே இழந்துவிட்டார்கள் என்று ஒரு பக்கமும் விவாதிக்கப்பட்டது.

நாம் படிக்கும் படிப்பு, நமக்கு ஒரு படிக்கல்லாய், ஒரு அடித்தளமாய் தான் இருக்கிறது. 
தொழில் குறை கல்வி பயின்றவர்களை, ஏதோ, ஒரு தொடக்கூடாத உயிரினம் போல், வாதிக்கப்பட்டது, எனக்கு சரியாக படவில்லை. ஒரு JNU வாதி, அவர்களை narcissist என்றார். மற்றவர்கள், MNC அடிமைகள் என்றனர். 

இப்போ, உங்கள் கருத்து...